சிவதர்சனி

வியாழன் கவி 1581!

உருமாறும் புதிய கோலங்கள்!

உருமாறும் புவி மீதில்
எத்தனை எத்தனை கோலங்கள்!
கருவாகி எருவாகும் வரை
மாறாது தொடரும் சாலங்கள்!
தரு மீதில் தவ வான் மீதில்
தகை நெறி மீதில்பரவும் மாற்றங்கள்
சிரம் மீதில் சிகரம் போலும்
ஏற்றம் பெறுமேஎழுச்சி கொள்ளுமே

கொறோனா என வொன்று
எமை வென்று உயிர் தின்றதே-பின்!
உரு மாற்றம் அதில் பல பரிமாணம்
ஊசியேற்றம் உள்ளத் தடுமாற்றம்!
பருவ மாற்றம் அபாய எச்சரிக்கை
அதன் பலாபலனோ பரிதாபம்!
உண்டாகும் போரின் ஆரம்பம்
உக்றைன் உக்கிரமாய்ப் பதற்றம்!

பனிகால இடமாற்றம் பரிமாறும்
விழி பற்பல அழகேற்றம் அரிதாரம்!
பணியோடும் பற்பல கற்பனை சேரும்! களிப்பு பொங்கும் கனியும்!
மனம் மீதில் மகிழ்வு பூக்கும்
மங்களம் பொங்கும் விழா சேரும்!
உருமாறும் புதிய கோலங்கள்
உணர்வாக்கும் உதட்டின் பூக்கள்!
சிவதர்சனி இராகவன்
17/2/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading