வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1617!

பூத்துக்குலுங்கும் புன்னகை!!

பூமிப் பெண்ணை நிறைத்து
புதுமை மண்ணில் படைத்து
பூங்காற்று மேனி வருடி
புதுராகம் மெட்டுக் கட்டி
புன்னகை எனும் வேதம்
புத்தெழில் அதில் ஒங்காரம்
புயலே உனக்குத் தடை
பூவாக மொட்டு உடை
புரிதல் கொள்ளும் மானிடம்
புதையல் ஆகும் தனித்துவம்
புறப்படு ஒரு கவி தொடு
பூவை வாழ்வு வளம் பெற
புதுயுகம் அது செவி தொட
புதுச் சேதி நம் பரிசாக
புல்லாங்குழல் ரீங்காரம்
பொல்லாங்கு மெல்ல விலகிடும்
எல்லோரும் நலம் வாழ
நல்லாசி வழங்கும் பூக்கள்..
நலவாழ்வை ஆக்கும் பாக்கள்!!!

சிவதர்சினி ராகவன்
20.4.19

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading