ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிவனுக்காய் ஒரு இராத்திரி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2114

சிவனுக்காய் ஒரு இராத்திரி

படைத்தவன் படியளப்பான்
பாரினைத் தினம் சுமப்பான்
இருளினைத்துரத்தி மெல்ல
ஒளியினை ஊட்டிச் செல்வான்

தந்தையே போல் ஒருவன்
தரணியைப் படைத்த தலைவன்
சிந்தைக்குள் உறையும் பெருமான்
சிறப்புடனே நம்மைக் காப்பான்

ஐந்தொழில் அவன் இயக்கம்
அனைத்திலும் அவன் முழக்கம்
ஆட்டத்தில் அருள் துலங்கும்
அவனின்றி ஏது அசையும்

சடாமுடி கருமை வண்ணம்
கழுத்தினிலே பாம்பு பற்றும்
விடமுண்ட கண்டன் நீயே
விடிவினைத் தருவாய் சிவனே

நெற்றிக் கண் நீதி சொல்லும்
நெறிமுறை வகுத்த வள்ளல்
ஓருடல் ஈருருவம் தங்கும்
இறைவனே போற்றி போற்றி..
சிவதர்சனி இராகவன்
27/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading