சிவனுக்காய் ஒரு இராத்திரி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2114

சிவனுக்காய் ஒரு இராத்திரி

படைத்தவன் படியளப்பான்
பாரினைத் தினம் சுமப்பான்
இருளினைத்துரத்தி மெல்ல
ஒளியினை ஊட்டிச் செல்வான்

தந்தையே போல் ஒருவன்
தரணியைப் படைத்த தலைவன்
சிந்தைக்குள் உறையும் பெருமான்
சிறப்புடனே நம்மைக் காப்பான்

ஐந்தொழில் அவன் இயக்கம்
அனைத்திலும் அவன் முழக்கம்
ஆட்டத்தில் அருள் துலங்கும்
அவனின்றி ஏது அசையும்

சடாமுடி கருமை வண்ணம்
கழுத்தினிலே பாம்பு பற்றும்
விடமுண்ட கண்டன் நீயே
விடிவினைத் தருவாய் சிவனே

நெற்றிக் கண் நீதி சொல்லும்
நெறிமுறை வகுத்த வள்ளல்
ஓருடல் ஈருருவம் தங்கும்
இறைவனே போற்றி போற்றி..
சிவதர்சனி இராகவன்
27/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading