சிவனுக்காய் ஒரு இராத்திரி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2114

சிவனுக்காய் ஒரு இராத்திரி

படைத்தவன் படியளப்பான்
பாரினைத் தினம் சுமப்பான்
இருளினைத்துரத்தி மெல்ல
ஒளியினை ஊட்டிச் செல்வான்

தந்தையே போல் ஒருவன்
தரணியைப் படைத்த தலைவன்
சிந்தைக்குள் உறையும் பெருமான்
சிறப்புடனே நம்மைக் காப்பான்

ஐந்தொழில் அவன் இயக்கம்
அனைத்திலும் அவன் முழக்கம்
ஆட்டத்தில் அருள் துலங்கும்
அவனின்றி ஏது அசையும்

சடாமுடி கருமை வண்ணம்
கழுத்தினிலே பாம்பு பற்றும்
விடமுண்ட கண்டன் நீயே
விடிவினைத் தருவாய் சிவனே

நெற்றிக் கண் நீதி சொல்லும்
நெறிமுறை வகுத்த வள்ளல்
ஓருடல் ஈருருவம் தங்கும்
இறைவனே போற்றி போற்றி..
சிவதர்சனி இராகவன்
27/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading