சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

சிவனுக்காய் ஒரு இராத்திரி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2114

சிவனுக்காய் ஒரு இராத்திரி

படைத்தவன் படியளப்பான்
பாரினைத் தினம் சுமப்பான்
இருளினைத்துரத்தி மெல்ல
ஒளியினை ஊட்டிச் செல்வான்

தந்தையே போல் ஒருவன்
தரணியைப் படைத்த தலைவன்
சிந்தைக்குள் உறையும் பெருமான்
சிறப்புடனே நம்மைக் காப்பான்

ஐந்தொழில் அவன் இயக்கம்
அனைத்திலும் அவன் முழக்கம்
ஆட்டத்தில் அருள் துலங்கும்
அவனின்றி ஏது அசையும்

சடாமுடி கருமை வண்ணம்
கழுத்தினிலே பாம்பு பற்றும்
விடமுண்ட கண்டன் நீயே
விடிவினைத் தருவாய் சிவனே

நெற்றிக் கண் நீதி சொல்லும்
நெறிமுறை வகுத்த வள்ளல்
ஓருடல் ஈருருவம் தங்கும்
இறைவனே போற்றி போற்றி..
சிவதர்சனி இராகவன்
27/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading