மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “பிறந்த மனை “மண்குடிசைதான் நான் பிறந்த மனை
ஆனால் மாஞ்சோலை
பொன்னார் வெளி என்ற
கிராமம்
பல்லவராஜன் மன்னன் ஆண்ட
பல்லவராயன் கட்டு பூநகிரி

பெரு முற்றம் நடுவே ஓலை வீடு
மண் குந்து பனை வரிச்சால்
வரிந்திருக்கும்
தாய் அறையும் பக்க அறையும்
மண்சுவர் முழுக்க
பக்க விறாந்தையிலே
களஞ்சிய பெரும் கூடையிலே
பச்சை பெருமாள் நெல்லு இருக்கும்
இடியப்பம் பலகாரம் என்று ஆக்கி உண்ண
இன்னும் ஒரு கூடையில்
மொட்டைக்கறுப்பன்
சோறாக்க
வளவு நிறைந்த காய்கறி
வயிற்றை என்றும் நிறப்பும் வளவு
கையில் காசு இராது
பண்டமாற்றாய் எதையும்
வாங்கலாம்
என் ஊரில் அந்த நாளில்
அக்கா அண்ணை மாமா என
பத்துப்பேர் மாலில் படுத்து உறங்குவோம்
பாசமாக
ஏர் உழுது வாழ்ந்தோம்
பஞ்ச வாழ்வு
போரும் வெளிநாடும்
போக்கடித்த இன்பம்.
ஆரை சொல்லி அழ.
சிவரஞ்சனி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading