அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!

வியாழன் கவி 2319!!

மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..

மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே வந்தார்
தருணமிது இறப்பினில் வீழ்கிறார்…

அறிவியல் நுட்பம் ஆய்ந்தறிந்தே
அளவற்ற படைப்புகள் ஆக்கிடுதே
மீதமுள்ள கழிவுகளால் மண்ணில்
மிதமாய் நச்சும் கலக்குதே பாரீர்..

பற்பல பெயர்களில் உருக்கொள்ளும்
பாதியில் வாழ்வை பறித்து செல்லும்
பணமெல்லாம் மருந்துக்கு செலவாகும்
பரிதாபம் மாசற்ற உலகே வேண்டுவதாகும்..

எத்தனை கோடியில் புரண்டாலும்
அத்தனையும் ஈடாமோ நோயின்மைக்கு
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகாம்
நேசத்தோடு தூய்மையை பேணுவோம்..
சிவதர்சனி இரா
9/4/2026

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading