நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மகிழ்ச்சி

வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ இருந்தால் சிறக்குமா வாழ்வு
அலைபோலத் துன்பம் வந்தாலும் அடுத்த கணமே துள்ளிஎழு
நிலையான உன் இதயத்தில்தான் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும்
இதயத்தைச் சுத்தப்படுத்து!

பெருகும் மகிழ்ச்சி பெருங்கடலாக அடுத்தவர் முகம் நோக்கிப் பாயும்
பிறர் தேவை அறிந்து உதவினாலே மகிழ்ச்சி
என்பது மலர்ச்சி பெறும்
மகிழ்ச்சியோடு வாழ்ந்துபார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்
அன்பும் பண்பும் மகிழ்ச்சியின் தூண்டுகோல்கள்
பிறரை மகிழ்வித்து வாழ்ந்தாலே
வாழ்க்கை இனிமையானது என்பதை நீ உணர்வாய்!
நன்றி வணக்கம்!