மகிழ்ச்சி

வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ இருந்தால் சிறக்குமா வாழ்வு
அலைபோலத் துன்பம் வந்தாலும் அடுத்த கணமே துள்ளிஎழு
நிலையான உன் இதயத்தில்தான் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும்
இதயத்தைச் சுத்தப்படுத்து!

பெருகும் மகிழ்ச்சி பெருங்கடலாக அடுத்தவர் முகம் நோக்கிப் பாயும்
பிறர் தேவை அறிந்து உதவினாலே மகிழ்ச்சி
என்பது மலர்ச்சி பெறும்
மகிழ்ச்சியோடு வாழ்ந்துபார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்
அன்பும் பண்பும் மகிழ்ச்சியின் தூண்டுகோல்கள்
பிறரை மகிழ்வித்து வாழ்ந்தாலே
வாழ்க்கை இனிமையானது என்பதை நீ உணர்வாய்!
நன்றி வணக்கம்!