நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வாழ்த்து..

பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின் ஊற்றேதொட்டுகையாகி தொட்டுயர்ந்தீர்இணைவுக் கவிஞர்பலரின்பாவாய்
தொகுத்தே தரும் கவிஞர் இணைவாய்
பாமுகப்பூக்கள் கவியின் மலராய்செவ்வாய் தோறும் செப்பனிட்டுகவியின்மலர்களில் நானும்ஒற்றைச்சரமாய்
ஒன்றித் தொடுக்கும்பாமாலை
உலகப் பதிவில்உராயும் கவியாய்
பாவையண்ணா குரலின் நயமாய்
பாராட்டி தட்டிக்கொடுக்கும் பண்பின் மிகையாய்
பாமுகப் பூக்கள் பிரசுரமாய்
கவிக்குள் கவிஞர் வசப்படும் நிறைவு
வாழ்த்துகள் உரித்தாய்
வரம் பெற்றோர் நாமாய்
பலரின் கூட்டாய்
போற்றியே சாற்றிடும் பாமாலை பாவிது!
சான்றோர் ஆன்றோர் கவி தொகுத்திட இணைவோர்
பாவையண்ணா,பாமுக இணையோர் அனைவர்க்கும் சமர்ப்பணச் சான்றே! சாதித்த உயர்வே!நன்றிவசந்தாஜெகதீசன்.

Author: