வாயார வாழ்த்துகிறேன் 21.04.2026

செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்

மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு

சந்தத்துடன் கவியும்
சந்தோச இருப்பு
சளைக்காது கவிதனை
சங்கமமாய் விருப்பு

பாமுக தோட்டடத்தில்
முன்னூறின் பூரிப்பு
பாரெல்லாம் படர்ந்து
பக்குவமான தரிப்பு

செவ்வாய் வந்தாலே
செந்தமிழாய் பகிர்வு
செழுமை குன்றாது
செதுக்கி அழகுறுத்தும்
பாவைஅண்ணாவே
வாழி வாழியவே

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading