விடுமுறைக்காலம்
இதயம்-61
சிவரூபன் சர்வேஸ்வரி
பூக்கும் புத்தாண்டு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பூக்கும் புத்தாண்டு பொலிவுடன் வருக //
காக்கும் நிலையிலே கருணையுடன் மிளிர்க //
நோக்கும் போதிலே பிணிகளும் ஒழிக //
தேங்கட்டும் செல்வம் செழிப்பாய் நின்றே //
பொங்கட்டும் புதுமைகள் பேரொளியும் போன்றே //
தஞ்சம் என்றே உன்னையே நம்பவே //
கஞ்சமகளாய் சிரித்துமே வருவாய் எழில்பூத்தே //
வண்ணமகளே வாடாத ரோஜாவே வாடியம்மா //
தேடாத திரவியமே தங்கமகளே தைமகளே //
உன்வரவும் என்னாளும் உலகமும் உய்யவே //
உயர்வே உகந்ததே உன்னத நீரோட்டமாய் //
தரவே வருவாய் நிம்மதியும் காணவே //
திறமே உன்னைப் போற்றியும் துதிக்கையில் //
மனமே இனிக்கவே மகிழ்வுகளும் தருவாய் //
இகபரசுகங்கள் இனிதுடன் கிடைக்கவே தினமும் //
பனிவிழும் துளியில் பசுமையும் துளிர்விட //
காய்களும் கனிகளும் கனிந்தே சிறந்திடவும் //
மலைகுலைந்தாலும் மனமும் குலையாத வண்ணம் //
தேன்குழலாய் தித்திப்பாய் தீர்வுடளே நின்று //
காலமகளே கலையமுதே காசினியின் மாதாவே //
அறத்தோடு அன்பும் மேவியே பாய்ந்திட //
மறைநூல் காட்டும் மாதேவி எங்கும் //
இருள் போக்கியே ஒளிவீசிட வேண்டும் //
அருள் கூடவும் அகமினிக்கவும் அருள்வாயே //
பிறைசூடியவா பித்தனே பத்தாவே உன்னடியேநாமே//
சிவருபன் சர்வேஸ்வரி
