” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பூக்கும் புத்தாண்டு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பூக்கும் புத்தாண்டு பொலிவுடன் வருக //
காக்கும் நிலையிலே கருணையுடன் மிளிர்க //
நோக்கும் போதிலே பிணிகளும் ஒழிக //
தேங்கட்டும் செல்வம் செழிப்பாய் நின்றே //

பொங்கட்டும் புதுமைகள் பேரொளியும் போன்றே //
தஞ்சம் என்றே உன்னையே நம்பவே //
கஞ்சமகளாய் சிரித்துமே வருவாய் எழில்பூத்தே //

வண்ணமகளே வாடாத ரோஜாவே வாடியம்மா //
தேடாத திரவியமே தங்கமகளே தைமகளே //

உன்வரவும் என்னாளும் உலகமும் உய்யவே //

உயர்வே உகந்ததே உன்னத நீரோட்டமாய் //
தரவே வருவாய் நிம்மதியும் காணவே //
திறமே உன்னைப் போற்றியும் துதிக்கையில் //
மனமே இனிக்கவே மகிழ்வுகளும் தருவாய் //
இகபரசுகங்கள் இனிதுடன் கிடைக்கவே தினமும் //

பனிவிழும் துளியில் பசுமையும் துளிர்விட //

காய்களும் கனிகளும் கனிந்தே சிறந்திடவும் //

மலைகுலைந்தாலும் மனமும் குலையாத வண்ணம் //

தேன்குழலாய் தித்திப்பாய் தீர்வுடளே நின்று //

காலமகளே கலையமுதே காசினியின் மாதாவே //
அறத்தோடு அன்பும் மேவியே பாய்ந்திட //

மறைநூல் காட்டும் மாதேவி எங்கும் //

இருள் போக்கியே ஒளிவீசிட வேண்டும் //

அருள் கூடவும் அகமினிக்கவும் அருள்வாயே //

பிறைசூடியவா பித்தனே பத்தாவே உன்னடியேநாமே//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan