சிவா சிவதர்சன்

[ வாரம் 292 ]
“சிறுமை கண்டு பொங்குவாய்”

சிறுமை கண்டு பொங்கி எழுபவன் தமிழனடா
இது உன் இயல்பான அடிப்படைக்குணமடா
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இருவகையடா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பொதுமறையடா

வாழ்க்கை மரபால் உயர்வும் தாழ்வும் விதிமுறை
மனிதகுலவாழ்வை உயர்த்திய தமிழர் தலைமுறை
சமுதாய சீர்கேடுகளை களைந்து காக்கும் அணை
தன்னுயிர்போல் பிறரையும் நேசிக்கும் முறை

இனமத மொழி நாட்டுப்பற்று கொண்டவர்
சிறுமைக்கெதிராய் போர்க்கொடி தூக்கியவர்
இவர்களே மானிடம் வாழ தியாகிகளானவர்
ஆஷாடபூதியாய் இன்றும் வலம் வருபவர்

வயிறுபிழைக்க தலைவராய் ஒட்டிக்கொள்வர்
அறிவு அனுபவமுடைய இன்றைய தலைமுறை
ஏமாற்றுவதோ,ஏமாறுவதோ இல்லை இதுவரை
சிறுமைகண்டு சிறுத்தையாய் பொங்கிஎழுவீரே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading