” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 292 ]
“சிறுமை கண்டு பொங்குவாய்”

சிறுமை கண்டு பொங்கி எழுபவன் தமிழனடா
இது உன் இயல்பான அடிப்படைக்குணமடா
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இருவகையடா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பொதுமறையடா

வாழ்க்கை மரபால் உயர்வும் தாழ்வும் விதிமுறை
மனிதகுலவாழ்வை உயர்த்திய தமிழர் தலைமுறை
சமுதாய சீர்கேடுகளை களைந்து காக்கும் அணை
தன்னுயிர்போல் பிறரையும் நேசிக்கும் முறை

இனமத மொழி நாட்டுப்பற்று கொண்டவர்
சிறுமைக்கெதிராய் போர்க்கொடி தூக்கியவர்
இவர்களே மானிடம் வாழ தியாகிகளானவர்
ஆஷாடபூதியாய் இன்றும் வலம் வருபவர்

வயிறுபிழைக்க தலைவராய் ஒட்டிக்கொள்வர்
அறிவு அனுபவமுடைய இன்றைய தலைமுறை
ஏமாற்றுவதோ,ஏமாறுவதோ இல்லை இதுவரை
சிறுமைகண்டு சிறுத்தையாய் பொங்கிஎழுவீரே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan