சிவா சிவதர்சன்

[ வாரம் 296 ]
[ வாரம் 296 ]
“முகமூடி”

மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும்
அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும்
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்
பொய் நன்மைதரின் உண்மையென கருதுவர் கற்றவர்

முகமூடி அணிந்தவர் அனைவரும் அல்லர் அயோக்கியர்
கொரோனா நோயிலிருந்து முகமூடி தந்தது பாதுகாப்பு
முகமூடிக்கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டியது அரசு
அரசே மக்களைச்சூறையாடினால் காப்பவர் எவரு?

முகமூடி தரித்தல் சரியா தப்பா யோசித்துபாரு
நாடு நல்லாயிருந்தால் முகமூடிக்கில்லை ஆபத்து
சீரழிந்து நடுரோட்டுக்கு வந்தால் முகமே இருக்காது முகமூடி தரிக்க
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பர்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading