கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 297 ]
“நம்பிக்கை”

மனித வாழ்வின் ஆரம்பம் ஜனனம்
பாவம் வாழ்க்கை முடியுமிடம் மரணம்
இரண்டுக்கும் நடுவே குறுகிய பயணம்
எல்லைகூறமுடியாத மர்மமான பயணம்

ஆனாலும் பயணத்தில் எத்தனை அவலம்?
நம்பிக்கைதான் உனைக்காக்கும் கவசம்!
பிறக்கும்போது நீயொரு வெற்றுக்கலசம்
அன்னையே உனைக்காக்கும் நம்பிக்கைத்தெய்வம்

கற்றகல்வியே வழிகாட்டும் ஆயுதம்
அன்பான அன்னையும் அறிவுசார்கல்வியும்
பிறழ்விலா நடத்தையும் உயர்த்திடும் உன்னையும்
உலகமே வாழ்த்திடும் உன் நம்பிக்கையும் வென்றிடும்!

நம்பிக்கையும் விடாமுயற்சியும் என்றுமே தோற்றதில்லை
அறிஞர், மேதைகளைப்பார்! ஆன்றோர்களைப்பார்!
தோல்விகளைக்கண்டுமவர் என்றுமே துவண்டதில்லை
நம்பிக்கையே சாதனைகளினடிப்படை என்பது பொய்கவில்லை

இன்றைய உலகின் வெற்றிக்கு சோர்விலாநம்பிக்கையே
காரணமென்பது இன்னுமா புரியவில்லை?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading