தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 297 ]
“நம்பிக்கை”

மனித வாழ்வின் ஆரம்பம் ஜனனம்
பாவம் வாழ்க்கை முடியுமிடம் மரணம்
இரண்டுக்கும் நடுவே குறுகிய பயணம்
எல்லைகூறமுடியாத மர்மமான பயணம்

ஆனாலும் பயணத்தில் எத்தனை அவலம்?
நம்பிக்கைதான் உனைக்காக்கும் கவசம்!
பிறக்கும்போது நீயொரு வெற்றுக்கலசம்
அன்னையே உனைக்காக்கும் நம்பிக்கைத்தெய்வம்

கற்றகல்வியே வழிகாட்டும் ஆயுதம்
அன்பான அன்னையும் அறிவுசார்கல்வியும்
பிறழ்விலா நடத்தையும் உயர்த்திடும் உன்னையும்
உலகமே வாழ்த்திடும் உன் நம்பிக்கையும் வென்றிடும்!

நம்பிக்கையும் விடாமுயற்சியும் என்றுமே தோற்றதில்லை
அறிஞர், மேதைகளைப்பார்! ஆன்றோர்களைப்பார்!
தோல்விகளைக்கண்டுமவர் என்றுமே துவண்டதில்லை
நம்பிக்கையே சாதனைகளினடிப்படை என்பது பொய்கவில்லை

இன்றைய உலகின் வெற்றிக்கு சோர்விலாநம்பிக்கையே
காரணமென்பது இன்னுமா புரியவில்லை?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading