” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 297 ]
“நம்பிக்கை”

மனித வாழ்வின் ஆரம்பம் ஜனனம்
பாவம் வாழ்க்கை முடியுமிடம் மரணம்
இரண்டுக்கும் நடுவே குறுகிய பயணம்
எல்லைகூறமுடியாத மர்மமான பயணம்

ஆனாலும் பயணத்தில் எத்தனை அவலம்?
நம்பிக்கைதான் உனைக்காக்கும் கவசம்!
பிறக்கும்போது நீயொரு வெற்றுக்கலசம்
அன்னையே உனைக்காக்கும் நம்பிக்கைத்தெய்வம்

கற்றகல்வியே வழிகாட்டும் ஆயுதம்
அன்பான அன்னையும் அறிவுசார்கல்வியும்
பிறழ்விலா நடத்தையும் உயர்த்திடும் உன்னையும்
உலகமே வாழ்த்திடும் உன் நம்பிக்கையும் வென்றிடும்!

நம்பிக்கையும் விடாமுயற்சியும் என்றுமே தோற்றதில்லை
அறிஞர், மேதைகளைப்பார்! ஆன்றோர்களைப்பார்!
தோல்விகளைக்கண்டுமவர் என்றுமே துவண்டதில்லை
நம்பிக்கையே சாதனைகளினடிப்படை என்பது பொய்கவில்லை

இன்றைய உலகின் வெற்றிக்கு சோர்விலாநம்பிக்கையே
காரணமென்பது இன்னுமா புரியவில்லை?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan