சிவா மோகன்

வணக்கம். “வரப்புயர. ”
உலகம்இசைந்திட உணவு தேவை, அதனை உவந்து தருவோர் காராளர்” புதிதாய் அரும்பி பசிப்போர் புசிக்க பாங்குடன் அசையும் அழகு நெற்கதிர். ஔவை கூறினாள் அன்று “வரப்புயர”ஆமாம் இன்று அதுவும் ஓர் சிறப்பிலும் சிறப்பு மன்னனை வாழ்த்திட அம்மை பாடியது இன்று மக்களின் பட்டினி தீர்க்கும் “மா ” மந்திரம். நீண்ட வரம்புடன் நெல் உற்பத்தி ,அதிலே நீர் உயர்ந்து ,அதனூடே குடி சிறந்து, அவ்வழியே கோல் நிலைத்து,அரசன் பெருமையும் அகிலத்தில் சிறக்குமாம். பஞ்சம் பசி போக்கும் பழைய வரப்பு,பாரினில் என்றும் விரிந்து பரந்து, பாசம் கண்டு நேசம் கொள்வது, பண்பினில் சிறந்து நிலைப்பது “வரப்புயர”.நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading