சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 10-03-2022
ஆக்கம் – 35
உன்னதமே உன்னதமாய்

விசித்திரமான உலகத்தில்
விந்தைமிகு மனிதர்கள்
சிந்தனை தெளிவு பெற்று
உலகிற்கு நல்வழி காட்டியதால்
உன்னத மனிதராய் போற்றப்படுகின்றார்கள்

உலகம் உருண்டை என்று சொன்னவன்
உதைக்கப்பட்டான்
உலகின் நலனுக்கா உழைத்தவர்கள்
பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
முயற்ச்சிகள் யாவும் நிதர்சனமாகும் வரை

ஆக்கதிற்க்கு ஊக்கம் தந்த அணு – இன்று
உலக அழிவிற்க்கு துணைபோகின்றது
சன்னதம் கொண்டு சதிராடுகின்றது
பயித்தியக்கார உலகம்

இயற்கையின் வழியில்
சிந்தனை மாற்றமும்
புதியதோர் உலகமும்
பிறந்திடல் வேண்டும்
மனித இனம் மனித தினம்
கொண்டாடும் நிலை வரவேண்டும்
உன்னதமானவர்கள் போற்றிப் புகழப்படவேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
09-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading