மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
14-05-2024

குருதிப்புனல்

எம் கனவுதேசம்
கையை விட்டு
கடந்து போன காலம்
கொஞ்சம் நினைக்க
நெஞ்சம் பதறுதே..

இழந்த உரிமைக்காக
விடுதலைக்காக
சுயமரியாதைக்காக
குரல் கொடுக்க
ஒடுக்க இனப்படுகொலைகள்

கடல் சூழ் முள்ளிவாய்க்கால்
தொடரல் நிலத்தில்
கடல் போலச் சனங்கள்
குருதிப்புனலாக
நகர்ந்த நாளிது

இளையவர், முதியவருமாய்
குஞ்சுகளும், பிஞ்சுகளுமாய்
தஞ்சம் புகுந்த இடத்திலே
நெஞ்சங்கள் பிளந்து
அழிந்தது எம் இனம்

மரண ஓலங்கள் ஒலித்தது.
அழுகுரல்கள் காதை பிளந்தன
நந்திக்கடல், குருதிப் புனலாய்
அலை பாய அந்நியதேசம்
அமைதியும் காத்த மே 18.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading