நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்

மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும் இயற்கை
சேதிகள் சொல்லும் வாழ்க்கை இது

குருவிகளின் ஓசையும் கேட்கும்
கூடவே சோடிகளை சேர்க்கும்
பருவ எழிலை ரசிக்கும் கண்கள்
பாரை பார்க்கும் பருவ வண்ணம்

பச்சை துளிர்க்கள் மரங்களில்
பார்க்கும் இடமே ரம்மியம்
இச்சை எமக்கு இயற்கையில்
இதுவும் மண்ணில் அதிசயம்!

கதிரவன் ஒளியின் கனலின் வீச்சு
உடலைச் சூடாக்கும் சூழல் வெப்பம்
வதியும் இடமே வசந்தத் துளிர்ப்பு
வா வா வசந்தமே வண்ண சுகந்தமாய்!

நகுலா சிவநாதன் 1849

Author: