அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

போரிருல் எப்போது நீங்கும்

அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி பிணங்களின் குவியல்
சுடுகாடுகளால் நிரம்பும் பூமியின் அவலம்

வெடிகள் குண்டுகள் மனித அவலங்கள்
புகைமூட்டம் கந்தகக் காற்று
அழுகையின் குரல் வேதனையின் கூக்குரல்
மண்வாசனை இரத்தவாசனையாக
கடலாக கண்ணீரின் பெருக்கு

துப்பாக்கி மௌனமாகி எப்போது உறங்கும்
குண்டுமழை எப்போது ஒயும்
இனம் மதம் நாடெனும் வெறி எப்போது தகரும்
மீண்டும் மனிதம் மலர்ந்து போரின் காயங்கள் எப்போது ஆறும்

ஜெயம்
02-04-2027

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading