16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
கவி 715
விடியாத இரவொன்று
விடியாத இரவென்று ஒன்றும் இல்லை
முடியாத துயரென்று என்றும் இல்லை
உழைத்தால் வாழ்க்கை வெளிச்சம் அடையும்
மலையைப்போல சுமையும் துகளாய் உடையும்
முயற்சியதை தொடராவிட்டால் இயலுமானதும் முடியாதுதான்
உயற்சியேது அங்கு விடிந்தாலும் விடியாததுதான்
மின்மினி பூச்சிகளுக்கு இரவென்ன
திரியவில்லையா
விண்ணிலே நிலாவின் உலாவும் தெரியவில்லையா
விலங்குகள் இல்லையேயென ஒப்பாரி வைப்பதில்லை
விளங்கிய மனிதனால் ஆயுளுக்கும் தொல்லை
அடுத்தவரோடு ஒப்பிடின் விடிவொன்று தானேது
விடுபடா இருளங்கே வெளிச்சமும் காணாது
பஞ்சப்பாட்டாய் பாடிக்கொண்டால் லட்சுமியுந்தான் நுழையுமா
பஞ்சிப்பட்ட வாழ்க்கையிலே சந்தோசந்தான் விளையுமா
குற்றஞ்சாட்டும் வாழ்க்கை வேண்டாமே இனியும்
மற்றவரை பார்க்காவிட்டால் வாழ்க்கையது கனியும்
ஜெயம்
13-03-2024

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...