ஜெயம் தங்கராஜா

சசிச

சிறுமை கண்டு பொங்குவாய்

பொங்குவாய் சிறுமைப்படுத்தும் கொடுமையை கண்டு
எங்குமே சமநீதி கிடைக்கட்டும் என்று
ஆழ்வோரின் அதிகாரம் இனியும் வேண்டாம்
தாழ்வோரில்லாத நிலம் அமைந்திட வேண்டும்

எளியோரை வலியோர் அடக்குவதை தடுப்பாய்
இழிவானவர்க்கு தக்க பதிலடி கொடுப்பாய்
வீட்டுக்குள்ளே பூனையாக இன்னுமேன் அடக்கம்
காட்டுப்புலியாகி சீறினாலே உரிமைகள் கிடைக்கும்

சமத்துவம் சகோதரத்துவம் தழைத்திட வேண்டும்
சமயமோ சாதியோ வேறுபடுத்தாது மீண்டும்
பிரித்துவைத்து பார்த்திடும் பாழான எண்ணம்
சரியானால் மனிதருள் மாற்றங்கள் திண்ணம்

பார் யாரெல்லாம் இதற்குள் மாட்டுவது
வேரூன்றிய பழக்கத்தை எதைக்கொண்டு மாற்றுவது
விடுதலையடைந்திட தொடங்குவாய் போராட்டத்தை இப்போதே
அடுத்த தலைமுறையாவது தப்பிப்பிழைக்கும் அப்போதே

ஜெயம்
12-01-25

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading