” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சிறுமை கண்டு பொங்குவாய்

பொங்குவாய் சிறுமைப்படுத்தும் கொடுமையை கண்டு
எங்குமே சமநீதி கிடைக்கட்டும் என்று
ஆழ்வோரின் அதிகாரம் இனியும் வேண்டாம்
தாழ்வோரில்லாத நிலம் அமைந்திட வேண்டும்

எளியோரை வலியோர் அடக்குவதை தடுப்பாய்
இழிவானவர்க்கு தக்க பதிலடி கொடுப்பாய்
வீட்டுக்குள்ளே பூனையாக இன்னுமேன் அடக்கம்
காட்டுப்புலியாகி சீறினாலே உரிமைகள் கிடைக்கும்

சமத்துவம் சகோதரத்துவம் தழைத்திட வேண்டும்
சமயமோ சாதியோ வேறுபடுத்தாது மீண்டும்
பிரித்துவைத்து பார்த்திடும் பாழான எண்ணம்
சரியானால் மனிதருள் மாற்றங்கள் திண்ணம்

பார் யாரெல்லாம் இதற்குள் மாட்டுவது
வேரூன்றிய பழக்கத்தை எதைக்கொண்டு மாற்றுவது
விடுதலையடைந்திட தொடங்குவாய் போராட்டத்தை இப்போதே
அடுத்த தலைமுறையாவது தப்பிப்பிழைக்கும் அப்போதே

ஜெயம்
12-01-25

Nada Mohan
Author: Nada Mohan