அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

திசை மாறும்பறவைகள்

திசை மாறும்பறவைகள்
சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்

துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே

கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே கேளாய்

பணத்தைக் கண்டதும் பண்பை இழந்தே

திசைமாறும் கூட்டம் திருந்தவே வாய்ப்பின்றி

அலைமோதும் நிலையில் ஆடும்

ஆட்டங்கள்

வலை போட்டு பிடிக்கவும் முடியாமல்

காலத்தின் கோலமோ கனியாத மனங்களும்

நிலையான எண்ணங்கள் நிலைகுலைந்து போகையிலே

மாயைகளுக்குள் நுளைந்தே மயங்கும் மனிதர்கள்

காயங்கள் கொண்டவர் கலங்கியே நின்றிடவே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading