தியாகம் பகுதி 2

ஜெயம்

இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்
தாயின் உயிரில் கலந்தது உயரிய தியாகம்
தீயினாலல்ல தூயவள் தன்னையே செய்திடும் யாகம்

அவர்களின் பெயரை கேட்காதே புகழ் உச்சரிக்கும்
அவரருமை மிகு தியாகம் நெஞ்சிலே தரிக்கும்
முற்றிலும் உருகிவிடும் மானுடத்தின் மகத்தான உருவம்
வெற்றியோ அவர் பின்னால் காட்டாரே கருவம்

மனிதன் பெருமை அவன் உயரத்தில் இல்லை
மனிதமே விட்டுச் சென்ற பெருமையின் எல்லை
தியாகம் என்பது செயலல்ல ஒரு சமயம்
சுயநலம் மறப்பின் மேன்மையின் வாழ்வு அமையும்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading