மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

வசந்தா ஜெகதீசன் நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும் கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள் இயந்திர...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி – 93

தலைப்பு – சோதனைகள் ஓழியட்டும்

வட்ட மலர்கள் வண்ணமாய் இருக்குது
கிட்டப் போக துடிக்குது கால்கள்
தொட்டுப் பார்க்க ஏங்குது விரல்கள்
பட்டமாய் பறக்குது காற்றினால் இதழ்கள்

காலையில் உதிர்த்தது மாலையில் வாடுது
சோலையில் மலர்ந்தது பாதையில் விழுகுது
வேலைச் சுமை மனதை வாட்டுது
பாலை வனத் தென்றலாய் போகுது.

எத்தனை வண்ணம் வானில் தெரியுது
அத்தனையும் நிறைவாய் மனதில் நிலைக்குது
சாதனைகள் பலதையும் வானவில்லாய் பரவ
சோதனைகள் சோர்வற்று சொல்லின்றி ஒழியட்டும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
17/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading