தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025

வண்ணக் கதிரவன் ஒளிவீச
வாடையும் மெல்ல விலகிட
தருக்களெல்லாம் கருக்கொள்ள
மொட்டுக்கள் முகையவிழ்த்து
மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம்
மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் !

வசந்தம் துளிர்ப்பானால்
வாழ்வு முழுமையும் புதுமையே
துளிர்க்கும் இலைகளும் இசைபாட
துள்ளிக் குதிக்குமே மனமும்
பச்சை கனிந்து மலர
இச்சை கொள்ளுமே மனமும் !

பனித்துளிகள் மலர்களை நனைக்க
பட்சிகள் இராகம் இசைக்க
மலர்கள் திறந்து முகம்காட்ட
மழைத்துளியும் மலர்களை முத்தமிட
பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க
மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே
துளிர்ப்பாகும் வசந்தம்
நல்மனங்களை வனப்பாக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading