ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025

வண்ணக் கதிரவன் ஒளிவீச
வாடையும் மெல்ல விலகிட
தருக்களெல்லாம் கருக்கொள்ள
மொட்டுக்கள் முகையவிழ்த்து
மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம்
மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் !

வசந்தம் துளிர்ப்பானால்
வாழ்வு முழுமையும் புதுமையே
துளிர்க்கும் இலைகளும் இசைபாட
துள்ளிக் குதிக்குமே மனமும்
பச்சை கனிந்து மலர
இச்சை கொள்ளுமே மனமும் !

பனித்துளிகள் மலர்களை நனைக்க
பட்சிகள் இராகம் இசைக்க
மலர்கள் திறந்து முகம்காட்ட
மழைத்துளியும் மலர்களை முத்தமிட
பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க
மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே
துளிர்ப்பாகும் வசந்தம்
நல்மனங்களை வனப்பாக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading