தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர்

குளிரும் கூதலும் குறைந்திடவே
பளீரென மனமது நிறைந்திடுதே
ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே

துள்ளிக் குதிக்குது சந்தோஷம்
மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம்
துருவித் துருவி மிளிரும் அரும்பு
உருமேனியில் ஒளிக்கற்றை பூசிட
கூசியே மலருமது மொட்டுக்கள்

பறவை அங்குமிங்கும் உலாவிட
புறாவும் இலைகளிற்கிடையில்
ஒளித்திருந்து கூடுகட்டிக் குஞ்சு
பொரித்த முனகு சத்தம் ஆனந்தம்

புது வாழ்வில் பூத்திடும் சிந்தனை
பூமியில் புத்துயிரூட்டப் புன்னகை
தளமாகும் விவசாயி நற்பலனாக
வளமாகத் துளிர்ப்பாகும் வசந்தம்.

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading