துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர்

குளிரும் கூதலும் குறைந்திடவே
பளீரென மனமது நிறைந்திடுதே
ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே

துள்ளிக் குதிக்குது சந்தோஷம்
மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம்
துருவித் துருவி மிளிரும் அரும்பு
உருமேனியில் ஒளிக்கற்றை பூசிட
கூசியே மலருமது மொட்டுக்கள்

பறவை அங்குமிங்கும் உலாவிட
புறாவும் இலைகளிற்கிடையில்
ஒளித்திருந்து கூடுகட்டிக் குஞ்சு
பொரித்த முனகு சத்தம் ஆனந்தம்

புது வாழ்வில் பூத்திடும் சிந்தனை
பூமியில் புத்துயிரூட்டப் புன்னகை
தளமாகும் விவசாயி நற்பலனாக
வளமாகத் துளிர்ப்பாகும் வசந்தம்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading