தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்
வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம்
எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின் விருந்தும்

எங்கும் பச்சை பசுமையென தரணியின் கோலம்
பொங்கும் உற்சாகத்துடன் உயிரினங்கள் வரவேற்றிடும் காலம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்பம் வாழ்க்கையில் மூளும்
மங்கிய மேனிக்குள் பிரகாசத்தை பாய்ச்சிடும் நாளும்

சூரியன் கண்திறந்ததைக் கண்டு மரங்களின் கொண்டாட்டம்
வேரினை ஆழமாய் ஊன்றி துளிர்விடுவதில் நாட்டம்
பாரின் அழகை வசந்தம் வந்தே கூட்டும்
தூரிகைகொண்டு அற்புத வண்ண ஓவியம் தீட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading