தொழிலாளர் தின வாழ்த்து

சிவருபன் சர்வேஸ்வரி
தொழிலாளர் தின வாழ்த்து

உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க
அதிகமாக முயற்சியும் ஆளுமையும் கொண்ட அதிதீகள் வாழி வாழி
வதிவிடம் உயர வளமான சமுகம் உருவாக தீவிரம் பேணும் தீர்கதர்சிகள் வளர்க
பதியாக வலுப்பெற்று உயிராக உரமூட்டும் உயர்ந்தவரே வாழ்க.
நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த நெற்றிக்கண்ணாய் கடமையிலே
நற்பணியில் நவின்று நிற்கும் நல்லவர்கள் வாழ்க.
ஏற்றிடும் போதிலே போற்றிடும் செயலிலே புகழ்சிந்தும் மன்னவர் வாழ்க
கண்ணியம் மேம்பிடவும் காலத்தில் சிறந்திடவும் வரப்புயர நிற்கும் வள்ளல்களே வாழ்க வாழ்க வாழ்கவே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading