13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
நகுலா சிவநாதன்
சந்தம் சிந்து கவி
முடியும்
முடியும் எண்ணம் உன்னுள்
முளைக்க வேண்டும் விதையாக!
விடியும் பொழுது வானம்
விரட்டும் இருளைத் தானாக!
வடியும் தண்ணீர் வளத்தை
வழங்கச் செல்லும் நிலமீது!
படியும் சிந்தை தானே
படைக்கும் வாழ்வை உரமாக!
அண்டப் புகழைப் பெற்றே
ஆளும் உற்ற உயர்திறனே!
உண்ட உணவு செரிக்கும்
உழைப்பால் என்றே உயர்ந்திடுக!
கண்டம் விரியும் கடலே
காக்கும் அரணாம் உணர்ந்திடுக
தொண்டு செய்யும் மதியே
தொடர்ந்தே ஓங்கும் புவிமேலே!
பொழியும் மழையே நிறைக!
பொழிலே அழகாய்ப் பூத்திடுக!
கழியும் காலம் களிப்பாய்க்
கவரும் வண்ணப் பேராற்றல்
அழியும் தீமை அகன்றே!
அணைக்கும் உள்ளம் ஆறுதலாய்!
சுழிபோல் துன்பம் சூழ்ந்தாலும்
சுகமாய் வாழத் தலைப்படுவோம்!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...