வரமாகும் வார்ப்புகளே!

நகுலா சிவநாதன் வரமாகும் வார்ப்புகளே! வரமாகும் வாய்ப்புகள் வையத்தின் கொடைகள் உரமாகும் நிலத்திற்கு உள்ளுரப் பசளை திறனாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

நகுலா சிவநாதன்

சந்தம் சிந்து கவி

முடியும்

முடியும் எண்ணம் உன்னுள்
முளைக்க வேண்டும் விதையாக!
விடியும் பொழுது வானம்
விரட்டும் இருளைத் தானாக!
வடியும் தண்ணீர் வளத்தை
வழங்கச் செல்லும் நிலமீது!
படியும் சிந்தை தானே
படைக்கும் வாழ்வை உரமாக!

அண்டப் புகழைப் பெற்றே
ஆளும் உற்ற உயர்திறனே!
உண்ட உணவு செரிக்கும்
உழைப்பால் என்றே உயர்ந்திடுக!
கண்டம் விரியும் கடலே
காக்கும் அரணாம் உணர்ந்திடுக
தொண்டு செய்யும் மதியே
தொடர்ந்தே ஓங்கும் புவிமேலே!

பொழியும் மழையே நிறைக!
பொழிலே அழகாய்ப் பூத்திடுக!
கழியும் காலம் களிப்பாய்க்
கவரும் வண்ணப் பேராற்றல்
அழியும் தீமை அகன்றே!
அணைக்கும் உள்ளம் ஆறுதலாய்!
சுழிபோல் துன்பம் சூழ்ந்தாலும்
சுகமாய் வாழத் தலைப்படுவோம்!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading