” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நகைப்பானதோ மனித நேயம்

வியாழன் கவி 2255

நகைப்பானதோ மனிதநேயம்..

புனிதம் போற்றும் மானிட பூமியில்
புதைந்து போனது மனித நேயம்
உணர்வுகள் அற்றதாய் உறவுகள்
கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்..

முதுமையும் தெருவில் அல்லாடுதலும்
முனகலில் பரிதாபம் புரியாமலும்
பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும்
பயணத்தில் உயிர் துறப்பதுமானது..

காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய
சிரிப்பும் சிந்தனையும் விலக
ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது..

விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது
அழிக்கும் மழை நீரில் காக்கட்டும்
இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும்
மனித நேயம் மீள மலரட்டுமே..
சிவதர்சனி இராகவன்
11/12/2025

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading