நகைப்பானதோ மனித நேயம்

வியாழன் கவி 2255

நகைப்பானதோ மனிதநேயம்..

புனிதம் போற்றும் மானிட பூமியில்
புதைந்து போனது மனித நேயம்
உணர்வுகள் அற்றதாய் உறவுகள்
கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்..

முதுமையும் தெருவில் அல்லாடுதலும்
முனகலில் பரிதாபம் புரியாமலும்
பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும்
பயணத்தில் உயிர் துறப்பதுமானது..

காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய
சிரிப்பும் சிந்தனையும் விலக
ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது..

விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது
அழிக்கும் மழை நீரில் காக்கட்டும்
இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும்
மனித நேயம் மீள மலரட்டுமே..
சிவதர்சனி இராகவன்
11/12/2025

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading