அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நத்தார் மலர்விலே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக

நத்தார் மலர்விலே..

புலரும் மார்கழித் திங்களின்
வரவே வரமே நத்தார் முகிழ்க்க
யேசு பால்ன் தொழுவத்தில்
தோன்றிய மகிமை உணைத்தி
பூம்பனிப் பொழிவும் புகழுரைக்க
பளபளக்கும் மழைத்துளி முத்தமிட
நத்தார் தாத்தா வந்தே தந்திடும்
வல்ல பல பண்டங்கள் கண்டும்
உறவுகள் ஒன்றாகிக் கொண்டாடும்
நத்தார் பண்டிகை சிறந்திடுமாம்
புதிய ஆண்டை வரவேற்கவே
யாவும் ஒளிமழையில் நனைய
வீதி விளக்குகள் அணிவகுப்பும்
நத்தார் மரத்தின் தலை நிமிர்வும்
பரிசுப்பொருள்களின் குவியலும்
பண்டிகையில் மூழ்கி மகிழ்வதும்
புதிய ஆண்டொன்று பூத்திடுமே
பழையது விடை பெறுமே காணீர்..

சிவதர்சனி இராகவன்
சுவிஷ்

Nada Mohan
Author: Nada Mohan