நத்தார் மலர்விலே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக

நத்தார் மலர்விலே..

புலரும் மார்கழித் திங்களின்
வரவே வரமே நத்தார் முகிழ்க்க
யேசு பால்ன் தொழுவத்தில்
தோன்றிய மகிமை உணைத்தி
பூம்பனிப் பொழிவும் புகழுரைக்க
பளபளக்கும் மழைத்துளி முத்தமிட
நத்தார் தாத்தா வந்தே தந்திடும்
வல்ல பல பண்டங்கள் கண்டும்
உறவுகள் ஒன்றாகிக் கொண்டாடும்
நத்தார் பண்டிகை சிறந்திடுமாம்
புதிய ஆண்டை வரவேற்கவே
யாவும் ஒளிமழையில் நனைய
வீதி விளக்குகள் அணிவகுப்பும்
நத்தார் மரத்தின் தலை நிமிர்வும்
பரிசுப்பொருள்களின் குவியலும்
பண்டிகையில் மூழ்கி மகிழ்வதும்
புதிய ஆண்டொன்று பூத்திடுமே
பழையது விடை பெறுமே காணீர்..

சிவதர்சனி இராகவன்
சுவிஷ்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading