நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நத்தார் மலர்விலே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக

நத்தார் மலர்விலே..

புலரும் மார்கழித் திங்களின்
வரவே வரமே நத்தார் முகிழ்க்க
யேசு பால்ன் தொழுவத்தில்
தோன்றிய மகிமை உணைத்தி
பூம்பனிப் பொழிவும் புகழுரைக்க
பளபளக்கும் மழைத்துளி முத்தமிட
நத்தார் தாத்தா வந்தே தந்திடும்
வல்ல பல பண்டங்கள் கண்டும்
உறவுகள் ஒன்றாகிக் கொண்டாடும்
நத்தார் பண்டிகை சிறந்திடுமாம்
புதிய ஆண்டை வரவேற்கவே
யாவும் ஒளிமழையில் நனைய
வீதி விளக்குகள் அணிவகுப்பும்
நத்தார் மரத்தின் தலை நிமிர்வும்
பரிசுப்பொருள்களின் குவியலும்
பண்டிகையில் மூழ்கி மகிழ்வதும்
புதிய ஆண்டொன்று பூத்திடுமே
பழையது விடை பெறுமே காணீர்..

சிவதர்சனி இராகவன்
சுவிஷ்

Nada Mohan
Author: Nada Mohan