நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan

மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்

அம்மாவின் முந்தானை
கைவிடாத இழுவையும்
அன்பினாலே அள்ளிச்
அரவணைத்த ஆசானும்

கல்வியை ஊட்டியும்
கசடறக் கற்பித்தும்
மண்ணிலே பலரையும்
பெருமிதம் செய்பவரே

நன்றியாய் என்றுமே
நானிலமும் வாழ்ந்திடல்
நல்மதிப்பு கொண்டே
நாணயமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading