நல்லுறவு

ஜெயம்

இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பார்
உண்மையான அக்கறையை எந்நிலையிலும் தொடர்வார்

ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் துணையாவார்
இரு இருதயங்களையும் ஒன்றாக இணைப்பார்
சோதனை வேளையிலே அன்பின் பாலம்
வேதனையை தீர்த்துவிடும் பண்பதுவும் நீளும்

தோழர்களிடயே நல்லுறவு உற்சாகமும் வளர்ச்சியும்
ஆழமான உறவதுவே நிம்மதியும் மகிழ்ச்சியும்
மொத்தத்தில் நல்லுறவால் மனதும் பூத்துவிடும்
அர்த்தமுள்ள வாழ்க்கையை பூமியில் சேர்த்துவிடும்

மனித வாழ்வின் அழகான நூல்
தனிமையை உணராதே மலர்ந்திடும் நாள்
நெஞ்சின் ஒழுக்கமே நல்லுறவாய் வெளிப்பாடு
இஞ்சியும் துயரில்லை புன்னகையே வாழ்வோடு

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading