நல்லுறவு

ஜெயம்

இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பார்
உண்மையான அக்கறையை எந்நிலையிலும் தொடர்வார்

ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் துணையாவார்
இரு இருதயங்களையும் ஒன்றாக இணைப்பார்
சோதனை வேளையிலே அன்பின் பாலம்
வேதனையை தீர்த்துவிடும் பண்பதுவும் நீளும்

தோழர்களிடயே நல்லுறவு உற்சாகமும் வளர்ச்சியும்
ஆழமான உறவதுவே நிம்மதியும் மகிழ்ச்சியும்
மொத்தத்தில் நல்லுறவால் மனதும் பூத்துவிடும்
அர்த்தமுள்ள வாழ்க்கையை பூமியில் சேர்த்துவிடும்

மனித வாழ்வின் அழகான நூல்
தனிமையை உணராதே மலர்ந்திடும் நாள்
நெஞ்சின் ஒழுக்கமே நல்லுறவாய் வெளிப்பாடு
இஞ்சியும் துயரில்லை புன்னகையே வாழ்வோடு

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading