நல்லுறவு

ராணி சம்பந்தர்

நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு

சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும் கோளும் ,வாளுமே
தில்லுமுல்லாய் வல்லூறாகிட
தொல்லை ஆக்கும் வெட்டுறவு

வல்லவனுக்குப் புல்லே ஆயுதம்
இல்லாதவனில் சொல் காகிதம்
பொல்லாதவன் நம்பிக்கையும்
நில்லாதவனில் பெருமூச்சுமே
கல்லாதவனிலூறும் கண்ணூறு

ஆறிடவே ஒன்றிணையும் அன்பு,
கூறிடவே அணைக்கும் ஒற்றுமை,
தேறிடவே அமைதி, பரிவிரக்கம் ,
ஏறிடவே பெருமையோ சேர்த்திட
நல்லோரில் நாலு பேர் போற்றிடும்
நல்லுறவு ஆகுமே .

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading