நல்லுறவு

ராணி சம்பந்தர்

நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு

சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும் கோளும் ,வாளுமே
தில்லுமுல்லாய் வல்லூறாகிட
தொல்லை ஆக்கும் வெட்டுறவு

வல்லவனுக்குப் புல்லே ஆயுதம்
இல்லாதவனில் சொல் காகிதம்
பொல்லாதவன் நம்பிக்கையும்
நில்லாதவனில் பெருமூச்சுமே
கல்லாதவனிலூறும் கண்ணூறு

ஆறிடவே ஒன்றிணையும் அன்பு,
கூறிடவே அணைக்கும் ஒற்றுமை,
தேறிடவே அமைதி, பரிவிரக்கம் ,
ஏறிடவே பெருமையோ சேர்த்திட
நல்லோரில் நாலு பேர் போற்றிடும்
நல்லுறவு ஆகுமே .

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading