“நிலா முற்றம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220

“நிலா முற்றம்”

இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்
நிலவே
உன் ஒளிக்கு ஈடு ஏது!

முற்றத்தில் இருந்து
நிலா நிலா ஓடிவா பாடி
அன்ன நடை போட என்னுடன் நீ வந்தாய் நின்றாய்!

நிலா வெளிச்சத்தில் அம்மா குழைத்த உணவை உண்டு உறங்கிய நினைவுகள்!

ஒளித்து பிடித்து விளையாடியதும்
மணல் வீடு கட்டி முற்றத்தில் விளையாடியதும்
எத்தனையா பிறை என
அம்மாவை
கேட்டு !

சட்டையை பிடித்து பிறை எண்ணியதும் இன்று போல் இருக்குதே!

தேய்பிறையில்
தேய்ந்து
வளர்பிறையில் வளரும்
அதிசய பிறவி நீ!
நன்றி
வணக்கம்
31.01.26

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

Continue reading