நிழலாடுதே நினைவாயிரம்……

“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026

காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள்
காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள்
நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட
நினைவுகள் சிலவோ மருந்தாக
நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக
ஆழ்மனதில் புதைந்திருக்க
நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி !

சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம்
அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம்
அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம்
பண்டிகை விழாக்கள் என்றால்
வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை
பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை
நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் !

இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில்
நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு
ஆனாலும் ஒன்றுகூடுவோம் – எனும்
நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading