19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(56)
அரங்கேற்றம்
கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி
கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி
அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே
மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே
செந்நீரில் குளித்தவராய் கரங்கள் நீட்டி
சிறகுதனை விரித்ததொரு பறவை போலும்
வந்த பணி முடிந்ததென்ற நிறைவோடு
மென்னகையாய் விழியசைத்துத் தலை சாய்க்க
கரு மேகம் திரண்டங்ஙே சூழ்ந்திருக்க
கதிரவனும் ஒழியிழந்து மறைந்தே போக
கல்குன்று மலர்களும் மணம் துறக்க
கல்வாரித் தென்றலே நீ சோர்ந்ததேனோ
மின்னலடி ஒசையுடன்
கற் தளங்கள் அதிர்ந்தொலிக்க
பகலே இரவாய் மாறிப் போக
இயற்கையுமே இயக்கமின்றிப் போனதுவே
மன்னுயிர்க்காய் தன்னுயிரீந்த மாபரனார்
மகனை ஈன்ற தாய்மரியும் எம் தாயானார்
சத்திய வேதம் என்றுமே நிலத்திடுமே
நித்தியமாய் பதித்திடுவோம் மனத்திடையே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...