இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(67). 04/08/22
அன்றும் இன்றும்
அன்று
அளவுக்கு மிஞ்சிய பணமும்
அடங்காத் திமிரும் ஆணவமும்
அளவிலா நோயும் கண்டதில்ல
அடுத்தவர்க்கு உதவும் எண்ணமுடன்
பெருகியே தழைத்து செழித்திருந்த உலகு

உண்மையை ஓங்கி உரைத்து
ஊக்கமாய் விரும்பி உழைத்து
உணவே மருந்தாக அளவோடு உண்டு
வளமோடு வாழ்ந்திருந்த மக்கள்

நிழல் படர்ந்த சோலைகள்
நீள் பயண பாதங்களுக்காய்
நீளக் காத்திருக்க காலாற நடந்த சென்று
உடல் நலம் பேணியே காத்திட்ட மனிதர்
இன்று
பகட்டுக்கு வாழ்ந்து பயனிலா பொருள் சேர்த்து
திகட்டும் அளவுக்கு உணவினைத் தினம் உண்டு
மருந்தே உணவாகி உடல் நலம் தொலைத்து
தளர்வோடு வாழ்கின்றனர் ஆயுளைக் குறைத்து

அறிவை வளர்க்கும் ஊடகங்கள் மௌனிக்க
காக்க வேண்டிய அரசுகள் களவாட
விடியலுக்காய் ஏங்குகின்ற மக்களினம்
தெருவோரம் காத்துக் கிடக்கு வரிசையிலே..

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading