பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே.... 08.05.2025 பாசமென்பது வெறும் வார்த்தையல்ல நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி உயிருக்குள் உயிர்தந்த...

Continue reading

பாசப்பகிர்வினிலே..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2145!! பாசப்பகிர்வினிலே..!! பக்குவமாய் இரு ஐந்து திங்கள் பகல் இரவாய்க் கண்விழித்து பாலூட்டித் தாலாட்டி...

Continue reading

பசுமை

ராணி சம்பந்தர்

சோர்வின்றியே உழுது பயிரிட்டுப்
பார் போற்றிய பச்சைப் பசேலிலே
போர் ஊற்றிய அலங்கோலமது

பயிரிட்டுப் பூரித்த பிறந்த மண்ணோ
போட்ட நச்சுக் குண்டிலேயே எரிந்து
மேலும் மேலும் கருகிச் சாம்பலாகிடக்
காலமும் மாறிய இரும்புக் கோலமது

பெரும் பூகம்ப வெள்ளப் பெருக்கோடு
சூறாவளியும் ஊதி ,ஊதி மோதிடவே
காடும், நிலமும் எரிந்து இயற்கை மாறி
எழுந்த பரிதாபகரப் பாவக் கோலமது

செயற்கையோடு மூடிய மாசுத் துகளும்,
இயற்கைக் காற்றோடு கலந்த தூசியும்,
ஊற்றெடுத்த நச்சுக் கிருமியும் பயிரை
அழித்துப் பசுமை ஒழித்த ஊமைப்
பசிக்குத் தீனியான கோலமதுவே .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading