பத்துமலை முருகா

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா

இந்து கடலின் ஓரத்தில்
இனிதே உறையும் எழில்முருகன்!
சிந்து பாடித் தொழுகின்றோம்
சீர்கள் அளிக்கும் அருட்செல்வன்!
சந்தக் கவிகள் பிறந்திடுமே!
சங்கத் தமிழும் சிறந்திடுமே!
சிந்தைக் குள்ளே அவனுருவைச்
சிந்தித் தாலே பேரின்பம்!
நித்தம் அவனை வணங்கிடவே
நிதமும் அருளும் பல்கோடி
கத்தும் கடலும் கவிபாடும்
கந்தன் நாமம் போற்றிடவே
சித்தம் கொடுக்கும் சிவன்மைந்தன்
சீராய் வரமும் தந்திடுவான்
புத்தம் புதிய மாட்சிமைகள்
புகழாய்த் தந்திடும் முருகனிவன்

நகுலா சிவநாதன் 1791

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading