” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பத்துமலை முருகா

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா

இந்து கடலின் ஓரத்தில்
இனிதே உறையும் எழில்முருகன்!
சிந்து பாடித் தொழுகின்றோம்
சீர்கள் அளிக்கும் அருட்செல்வன்!
சந்தக் கவிகள் பிறந்திடுமே!
சங்கத் தமிழும் சிறந்திடுமே!
சிந்தைக் குள்ளே அவனுருவைச்
சிந்தித் தாலே பேரின்பம்!
நித்தம் அவனை வணங்கிடவே
நிதமும் அருளும் பல்கோடி
கத்தும் கடலும் கவிபாடும்
கந்தன் நாமம் போற்றிடவே
சித்தம் கொடுக்கும் சிவன்மைந்தன்
சீராய் வரமும் தந்திடுவான்
புத்தம் புதிய மாட்சிமைகள்
புகழாய்த் தந்திடும் முருகனிவன்

நகுலா சிவநாதன் 1791

Nada Mohan
Author: Nada Mohan