பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பத்துமலை முருகா

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா

இந்து கடலின் ஓரத்தில்
இனிதே உறையும் எழில்முருகன்!
சிந்து பாடித் தொழுகின்றோம்
சீர்கள் அளிக்கும் அருட்செல்வன்!
சந்தக் கவிகள் பிறந்திடுமே!
சங்கத் தமிழும் சிறந்திடுமே!
சிந்தைக் குள்ளே அவனுருவைச்
சிந்தித் தாலே பேரின்பம்!
நித்தம் அவனை வணங்கிடவே
நிதமும் அருளும் பல்கோடி
கத்தும் கடலும் கவிபாடும்
கந்தன் நாமம் போற்றிடவே
சித்தம் கொடுக்கும் சிவன்மைந்தன்
சீராய் வரமும் தந்திடுவான்
புத்தம் புதிய மாட்சிமைகள்
புகழாய்த் தந்திடும் முருகனிவன்

நகுலா சிவநாதன் 1791

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading