(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை...

Continue reading

பத்துமலை முருகா

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா

இந்து கடலின் ஓரத்தில்
இனிதே உறையும் எழில்முருகன்!
சிந்து பாடித் தொழுகின்றோம்
சீர்கள் அளிக்கும் அருட்செல்வன்!
சந்தக் கவிகள் பிறந்திடுமே!
சங்கத் தமிழும் சிறந்திடுமே!
சிந்தைக் குள்ளே அவனுருவைச்
சிந்தித் தாலே பேரின்பம்!
நித்தம் அவனை வணங்கிடவே
நிதமும் அருளும் பல்கோடி
கத்தும் கடலும் கவிபாடும்
கந்தன் நாமம் போற்றிடவே
சித்தம் கொடுக்கும் சிவன்மைந்தன்
சீராய் வரமும் தந்திடுவான்
புத்தம் புதிய மாட்சிமைகள்
புகழாய்த் தந்திடும் முருகனிவன்

நகுலா சிவநாதன் 1791

Nada Mohan
Author: Nada Mohan