10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
பாலதேவகஜன்
வெற்றிப்பயணம்
கட்டளை பிறப்புக்காய்
காத்திருப்போம்.
கடும் பயிற்சகள் யாவிலும்
கலந்திருப்போம்.
இலக்கு என்ற ஒன்றை மட்டும்
இடைவிடாது நினைத்திருப்போம்
இரவு பகல் பார்க்காமல்
ஈழத்தாயை காத்து நின்றோம்.
வண்ணமாய் நீங்கள்
வாழ்ந்திடவே
திண்ணமாய் நாங்கள்
நின்றிருந்தோம்.
மண்ணையும் மக்களையும்
காத்திடவே எங்கள்
உடலையும் உயிரையும்
அர்ப்பணித்தோம்.
வேதனை கண்களில்
நிறைந்திருந்தும்
விடுதலை பெற்றிடவே
விழித்து நின்றோம்.
உலகமே பதறும்
பலத்துடனே இருந்தோம்
உன்னத வேள்விக்குள்
மூள்கியே கிடந்தோம்.
சமபலம் என்ற நிலையோடு
சமாதனத்துக்குள் நுழைந்தோம்
இது தந்திரோபாய நகர்வென்று
எண்ணிடாதே இருந்தோம்.
துரோகங்களால் நெருங்காதென்ற
நெஞ்சுரத்துடனே இருந்தோம்
துரோகங்களால் வீழும்
நிலைக்குள்ளே நின்றோம்.
வெற்றி பயணங்களையே
தொடர்ந்திட்ட எமக்கு
துரோகம் தந்த வலிகளால்
தளரும் நிலைக்கே சென்றோம்.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...