16
Oct
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
16
Oct
பாலதேவகஜன்
சிறுமை கண்டு பொங்குவாய்
உரிமை மறுப்பும்
உடமை அழிப்பும்
தந்ததன் வலிகள்
உணர்விலே குற்ற
எம்மினம் காக்க
பொங்கிய ஒருவன்
புலிப்படை அமைத்து
பெரும்படை கொண்டான்.
சிறுமையாய் எங்களை
சிதைத்தவன் முன்னே
பெருமையாய் நிமிர
மனோபலம் ஆனான்.
கருமைகள் படர்ந்த
கார்முகில் காலம்
கவலைகள் போக்கிட
கரிகாலனாய் பிறந்தான்.
இடர்களுக்குள்ளே
இருந்திட்ட எம்மை
சுடராகி எரிந்து
பேரொளியினை தந்தான்.
பதுங்கியே வாழ்ந்த
வாழ்வினை மாற்றி
பாயும் புலியென எழுந்திட
பெரும் துணிவும் தந்தான்.
ஈழம்க் கனவை
இறுகப் பிடித்து
இருப்பின் அரணாய்
நெருப்பாய் எழுந்தான்.
சுடுகலை பயின்று
விடுதலை வேள்வியில்
தன்னை ஆகுதியாக்கிட
விருப்புடன் நின்றான்.
வஞ்சகம் சூழ்ந்த
வெஞ்சமர் தனிலும்
நெஞ்சுரம் குன்றா
நிலையுடன் நின்றான்.
இருப்பினை உணரா
நிலையாகி நின்று
இறைவனாய் என்றுமே
இதயத்தில் எழுந்தான்.

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...