19
Aug
வியாழன் கவி-2375!!!
மண்ணைப் பிளந்துமே
கொள்ளும் வைரமும் நிலக்கரி
எண்ணற்ற யாவும் பெறவே
எத்தனை முயற்சியும் கொள்வார்
வானை முட்டி...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி
ராணி சம்பந்தர்
வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே
பட்டுப் போய் கெட்டு விடாது
முட்டும் வேரிலிருந்து மண்
புட்டுக் கொண்டு வரும்...
19
Aug
20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்
முயற்சியும் பயிற்சியும் இணைவில்
மனித வாழ்க்கை வெற்றி பெறும்
விடியலை நோக்கி பயணிப்பில்
வாழ்வில் துன்பங்கள் ஓடி...
பாலதேவகஜன்
சிறுமை கண்டு பொங்குவாய்
உரிமை மறுப்பும்
உடமை அழிப்பும்
தந்ததன் வலிகள்
உணர்விலே குற்ற
எம்மினம் காக்க
பொங்கிய ஒருவன்
புலிப்படை அமைத்து
பெரும்படை கொண்டான்.
சிறுமையாய் எங்களை
சிதைத்தவன் முன்னே
பெருமையாய் நிமிர
மனோபலம் ஆனான்.
கருமைகள் படர்ந்த
கார்முகில் காலம்
கவலைகள் போக்கிட
கரிகாலனாய் பிறந்தான்.
இடர்களுக்குள்ளே
இருந்திட்ட எம்மை
சுடராகி எரிந்து
பேரொளியினை தந்தான்.
பதுங்கியே வாழ்ந்த
வாழ்வினை மாற்றி
பாயும் புலியென எழுந்திட
பெரும் துணிவும் தந்தான்.
ஈழம்க் கனவை
இறுகப் பிடித்து
இருப்பின் அரணாய்
நெருப்பாய் எழுந்தான்.
சுடுகலை பயின்று
விடுதலை வேள்வியில்
தன்னை ஆகுதியாக்கிட
விருப்புடன் நின்றான்.
வஞ்சகம் சூழ்ந்த
வெஞ்சமர் தனிலும்
நெஞ்சுரம் குன்றா
நிலையுடன் நின்றான்.
இருப்பினை உணரா
நிலையாகி நின்று
இறைவனாய் என்றுமே
இதயத்தில் எழுந்தான்.
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...