கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

பாவை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 297 விருப்ப தலைப்பு

“ஆழப்புழா “.

உல்லாச படகு சவாரி
ஊர்ந்து நீரில் உலாவி
சல்லாபம் பாடல் ஆடல்
சந்தோஷ குடும்ப உலாவல்

ஆலப்புழா ஊரின் ஓரம்
அமைவு கேரளம் ஆகும்
சோலை நிறை கரை நீளம்
சொர்க்கசுகம் மனத் ஊறும்

தென்னையில்கள்ளு ஊறும்
தெம்மாங்கு நாவே பாடும். தென்றல் சாமரை வீசும்
திடலில் வீடுகள் ஜோரும்.

துடிக்க துடிக்க மீன்கள்
சுட்டுத் தின்ன நெருப் ஏறல்
கடிக்க கொறிக்க சுவைக்க
கள்ளித்து நாக்கு சுவைக்க

தென்றல் இதமாக வீச
திரள்அலை நிலவில் ஓட
மின்மினி மேகத்தில் ஆட
மேனியில் சிலிர்ப்பு மேவ

காதலி மடியிலே சாய
காற்றில் அவள் கேசம் நீள
ஏது தான் இதற் ஈடு என்று
இன்ப கனத்திலே நெஞ்சு.

ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading