” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாவை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 297 விருப்ப தலைப்பு

“ஆழப்புழா “.

உல்லாச படகு சவாரி
ஊர்ந்து நீரில் உலாவி
சல்லாபம் பாடல் ஆடல்
சந்தோஷ குடும்ப உலாவல்

ஆலப்புழா ஊரின் ஓரம்
அமைவு கேரளம் ஆகும்
சோலை நிறை கரை நீளம்
சொர்க்கசுகம் மனத் ஊறும்

தென்னையில்கள்ளு ஊறும்
தெம்மாங்கு நாவே பாடும். தென்றல் சாமரை வீசும்
திடலில் வீடுகள் ஜோரும்.

துடிக்க துடிக்க மீன்கள்
சுட்டுத் தின்ன நெருப் ஏறல்
கடிக்க கொறிக்க சுவைக்க
கள்ளித்து நாக்கு சுவைக்க

தென்றல் இதமாக வீச
திரள்அலை நிலவில் ஓட
மின்மினி மேகத்தில் ஆட
மேனியில் சிலிர்ப்பு மேவ

காதலி மடியிலே சாய
காற்றில் அவள் கேசம் நீள
ஏது தான் இதற் ஈடு என்று
இன்ப கனத்திலே நெஞ்சு.

ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan